Sunday 24 August 2014

என்னை நீ புதினமாக நினைவில் கொள்ளவேண்டாம் 
அழகிய நால்வரி கவிதையாய் பத்திரபடுத்திக்கொள்.
பெருவெள்ளம் கொள்ளும் அடை மழையாய் வேண்டாம் 
வெறும் கூரை வழி சீலையாய் விழும் மென் மழையாய் வருகிறேன்.
கிணற்றில் வீசிய பச்சை மரகதம் போல கிடக்கிறேன் உன்னுள், 
பார்பவருக்கு பாசிப் படிந்த கல்லாய் தெரியட்டும். 
மாரிமேக இடிகளாய் நானில்லை உன் செவிக்கு 
மணியோசையின் எச்ச ரீங்காரமாய் இருப்பேன்.
நீயில்லாமல் போனால் நீயாகவே நானிருப்பேன் !!

No comments:

Post a Comment