Sunday 24 August 2014

யாருடைய கதையையோ முனுமுனுக்கிறது காற்று 
சொல்லாத வார்த்தைகளை கிசுகிசுக்கிறது தீ 
ஆழ்ந்த காதலால் மௌனம் கொண்டு அமர்ந்திருக்கிறது மலை 
கோடான கோடி உயிர்களை தாங்கியபடி சூல் கொண்டிருக்கிறது கடல் 
கண்மூடி ஏகாந்த தியானத்தில் இருக்கிறது அண்டம் 
என் மனம் மட்டும் ஆர்ப்பரித்து அலைகிறது காற்று தீ மலை கடல் அண்டத்தின் செல்ல கன்றாய்.

No comments:

Post a Comment