Sunday 24 August 2014

அண்ட சாம்பல்கள் வந்து அண்டுகிறது கறைப்படா மனதினுள் 
கோவம் முற்றி பீறிட்ட தீக்குழம்புகள் குளிர்ந்து ஒளி கசியும் கற்கள் படைக்கின்றன 
ஒளிரும் கற்களை அணிந்து திரிகிறேன், அதை உண்ண இயலாதென்பதால்.
குளிர்ந்த தீ நீராய் ஒழுகி,பிரவாகித்து சமவெளி நோக்கி பாய்கிறது.
கடல் தேடி அலையும் என் நதிக்கு வெறும் மலைகள் மட்டுமே கிடைக்கிறது.
என்னுள் கடல்கள் உயரவும் மலைகள் தாழவும் படைத்துவிட்டேன்.
ஒற்றை விதை தேடி அலைகிறது இங்கு முழு வெள்ளம்.
விதை வளர்த்து மரமாக்கா நீர் கொண்டு நான் என்ன செய்ய?
என் உடலெரித்து எஞ்சும் நீறு கரைக்க மட்டுமா என் நதி ?

No comments:

Post a Comment