Sunday 24 August 2014

ஆள முடியா பெருங்கடல் பற்றியும் 
அணைக்க முடியா நெருப்பை பற்றியும் 
அல்லவே நம் காதல் !
வெறும் அணைப்பை பற்றியும் 
கொஞ்சம் வெறுமை பற்றியும் தானே நம் காதல்.
வெறும் வெற்றிடங்கள் நிரப்பும் பொறுப்பு மட்டுமா நம் காதல்?
கொஞ்சம் இடைவெளி பற்றியதல்லவா நம் காதல்.
கொஞ்சம் கலவி கொஞ்சம் கதைகள் நிறைய அமைதி என்றே கழியட்டுமே இரவு.
இன்னும் கொஞ்சம் இருந்துவிட்டு போ என்னும் வார்த்தையை மட்டும் சொல்லிவிடாதே,
எதுவானாலும் இங்கேயே இருந்தே செய்கிறேன்.
தனிமைகள் காதல் உணர்த்தலாம் வளர்க்காது.

No comments:

Post a Comment