Sunday 24 August 2014

நாம் இன்னும் வெற்று மூளைகளின் வெறுமைகளில் தான் வாழ்கிறோம் 
கிழக்கும் மேற்கும் நம்மை என்ன செய்துவிடுகிறது ?
காலங்களை மாற்றி உறைப்பனியும் தீக்கக்கும் கோடையுமாய் ஆக்கினாலும் 
வடக்கும் தெற்கும் நம்மை என்ன செய்துவிடுகிறது ?
தலைக்கு அணையாக ஒரு மண்மேடு எப்படியும் கிடைக்கும் 
பெரும் செல்வம் நம்மை என்ன செய்துவிடுகிறது?
நாம் மேகங்களை துரத்திக்கொண்டு நிழல் தேடுபவர்கள் அல்லவே 
ஞாயிற்று கதிர் நம்மை என்ன செய்துவிடுகிறது?
நீயும் நானும் இறப்பை பற்றியும் எண்ணியதில்லை இரையை பற்றியும் எண்ணியதில்லை
அச்சம் வந்து நம்மை என்ன செய்துவிடுகிறது ?
நட்சதிரங்களை எண்ணியபடி சிரித்து பேசி இரவை கழிப்போம்
விடியலின் கீற்று கீழ்வானில் தெரியும் வரை
நாளை நம்மை என்ன செய்துவிடும்?

No comments:

Post a Comment