Sunday 24 August 2014

காரின் பனியில் உறைந்த கண்ணாடி வழி பார்த்துக்கொண்டே செல்கிறேன் 
கரகரக்கும் ரேடியோவின் வழி ஒழுகும் பழைய பாடலொன்று என் பயண துணை.
ஆளரவமற்ற ஒரு சிறு நகரத்தின் வாழ்வின் மிச்சங்கள் எங்கும் தெரித்துகிடக்கிறது. 
அங்கொன்றும் இங்கொன்றுமாக வளர்ப்பு மிருகங்கள் சுருண்டு வாழ்வை எதிர் நோக்கி தவம் கிடக்கின்றன. 
புகையற்ற சமைலறை புகை கூண்டுகளும் பூசைகளற்ற கோவில் கோபுரங்களும் இன்னும் வானை நோக்கியே நிற்கின்றன.
அடைப்பாரின்றி சன்னல் கதவுகள் காற்றின் போக்கிற்கு இசைந்து அசைகின்றன.
கடைசியாய் போன எதோ ஒரு இறுதி ஊர்வலத்தின் காய்ந்த மலர்கள் சாலையில் கிடக்கின்றன.
ஊரின் கடைசியில் நிற்கிறது நீயும் நானும் வாழ்ந்த வீடு, அத்தனை இன்ப நினைவுகளையும் சுமந்தப்படி.

No comments:

Post a Comment