Saturday 21 June 2014

மனம் தறிக்கெடுகிறது,
என்ன விளையாட்டிது ?
வலிகள் கூட்டி சுவைக்கிறது.
இதழ்களில் பாடல் எங்கிருந்து வருகிறது?
அது என்னை ஏன் அண்டம் கடந்து அழைக்கிறது?
நினைவுகளும் இல்லை மறக்கவும் இல்லை,
முன் எப்போதோ கேட்ட சாயல்களில் அந்த பாடல்.
இந்த பாடல் பழையது தான் முன்பு எவருக்கோ,
எனினும் எனக்கிது புதிது.
மேகம் மழை ஊஞ்சல் கட்டுகிறது, மின்னல்கள் பாலமிடுகிறது.
தோன்றிய காலம் முதல் பெய்து கொண்டிருக்கும் மழை
ஏனோ இன்றும் புதியதாய் தெரிகிறது.
எவரெவருக்கோ பெய்யும் மழை எனக்கும் பெய்கிறது.

No comments:

Post a Comment