Saturday 21 June 2014

நம்பிக்கை இருக்கட்டும்,
கனவுகளும் கைப்பட இருக்கட்டும்
கனவுகள் சிரித்தே இருக்கட்டும்
கண்மையிட்ட கண்களில் கனவுகளும்
சேர்ந்தபடி இருக்கட்டும்.
நீ பிரியவே போவதில்லை என்ற பொய்
சத்தியங்களை நம்பிய கனவுகள்
சேர்ந்துக்கொண்டே இருக்கட்டும்.
ஒற்றை பனையும் அதன் பின் தொலைவானில்
தெரியும் நிலவும் சோடி என்றே நம்பிக்கை வரட்டும்
கனவுகளும் நம்பிக்கைகளும் வந்து கொண்டே இருக்கட்டும்
இல்லை காதல் துருப்பிடித்து விடும்.

No comments:

Post a Comment