Saturday 21 June 2014

என் பிள்ளைகளின் உடலை மட்டும் சுமந்தேன்
அவர்கள் ஆத்மாவையல்ல.
என்னுடையது என நான் ஏந்தி திரிய எதுவுமே இல்லை.
நாளை என்ற நிச்சயமற்ற குருடன் கண்ட கனவை
இன்றிலிருந்து நோக்க முற்பட்டு தோற்று போகிறேன் தினந்தினம்.
வில்லாய் நின்று என் காதலை அம்புகளாய் எய்துக் கொண்டிருக்கிறேன்.
விற்கள் நின்றால் தான் அம்புகள் பறக்கும், வில்லும் சேர்ந்து பறத்தலாகாது.
பறந்து சொருகிய அம்புகளின் நுனியில் சிதறும் குருதி துளிகளாய் என் பிள்ளைகள்.
என் பிள்ளைகளின் உடல்களை மட்டும் சுமக்கிறேன்.

No comments:

Post a Comment