Saturday 21 June 2014

யாருமற்ற ஒரு மாலை பொழுது
கடலும் நானும் மட்டும்
ஆர்ப்பரிக்கும் இந்த பெருநீர் தான் எத்தனை அழகு!
கால் தழுவி கண்ணாம்மூச்சி ஆடுகிறது அலைகள்.
கொஞ்சம் நேரத்தில் பேசத்துவங்கி விட்டன.
வரும் என்று பார்க்கும் போது வராமலும்,
வராதே என்று விரட்டும் போது வாரி இறைத்தும்
பிறந்த கன்று குட்டி போல என்ன விளையாட்டு!?
குங்குமமாய் சிவந்த வானம் மெல்ல இருளும் போதுதான்
கடல் கருமையாக இராட்சசன் போல அச்சுறுத்துகிறது.
அத்தனை பெரிய கடல் சின்ன அலை விரல்களால் என்னையும்
தீண்டியதில் நட்பு தான் தெரிந்தது, பயம் விலகி.
அத்தனை ஆர்பாட்டங்கள் அலையிலிருந்தாலும் கடலென்னமோ
ஆழ்ந்த மௌனம் தான் பூண்டிருக்கிறது.
அலையோசையில் இசை ஒரு பாடல் பாடிக்கொண்டே இருந்தது.
வரிகள் தான் புரியவில்லை. கடல் மொழியும் கற்க
வேண்டும்.

No comments:

Post a Comment