Saturday 21 June 2014

அத்தனை கனவும் உடைந்தது
இருட்டும் என் மேல் விரிந்தது
இன்பம் எல்லாம் தொலைந்தது
வாழ்வும் இலக்கின்றி அலைந்தது
உன்னை காதலித்த ஒரு காரணம்
தனிமைக்கு நான் உதாரணம்

காதல் என்னும் கண்ணாடி கோட்டை
கண்ணில் வைத்தேன் புது பாட்டை
கல்லொன்று எறிந்தாய் சிதறியது
விழிகளில் உதிரம் வழிகிறது
நேற்றுவரை என் இதயத்தில் எனக்கே இடமில்லை
இன்று நான் பார்க்கிறேன் எவருமே இல்லை
நாகத்தின் மூச்சாய் விஷம் கக்கி தவிக்கிறேன்
நீரில்லா கடல் போல பாலையாய் விரிகிறேன்
நடக்காத கனவில் நம்பிக்கை வைத்தேன்
எழுதாத கடிதத்தில் நலம் கேட்டு வைத்தேன்

இத்தனை தொலைவிலா நீ இருப்பாய் ?
பயணத்தின் பாதியிலே இரவு மண்டியது!
அத்தனை கனவும் உடைந்தது
இருட்டும் என் மேல் விரிந்தது !!

No comments:

Post a Comment