Saturday 21 June 2014

முண்டாசுக்கட்டும் முறுக்கு மீசையும்
மட்டும் ரௌத்திரமில்லை,
நாடு தாண்டி சென்று வெள்ளையனுக்கெதிராய்
படைத்திரட்டியது மட்டும் வீரமில்லை.
ஆள்பவனுக்கெதிராய் அவன் மன்றத்தில்
குண்டு வீசியது மட்டும் எழுச்சி இல்லை
அடித்த வலியை பொறுத்துக்கொண்டு
அடுத்த கன்னம் காட்டியது மட்டும் எதிர்ப்பில்லை.
கூடிக்களித்த வீடு நொருங்கி கிடக்க
கட்டிய மனையாள் கருகி கிடக்க
சீராட்டிய பிள்ளையின் சிதைந்த உடலை
பொறுக்கி தேத்தி
கடைசியாக கண்ணீர் விட்டு.
முத்தமிட்ட இதழில் பதிந்த நாறும் குருதியை
புறங்கையில் துடைத்துவிட்டு
பிறந்த மண்விட்டு செல்ல மறுப்பு தெரிவிக்கும் ஒரு செயலில்
பாரதி, போஸ்,பகத்சிங், காந்தி எல்லாம் ஒன்றாய் நிற்பரோ?!!!

No comments:

Post a Comment