Saturday 21 June 2014

அடர்ந்த இரவின் முதுகில் பயணிப்பவனுக்கு
என் சன்னல் கம்பிகளுக்கிடையில் என்ன வேலை ?
இருட்டின் கருமையில் அஞ்சி தலையணையில் முகம் புதைக்கையில்
மூச்சுக்காற்றாய் வந்து தழுவிக் கொள்கிறான்.
மூடு பனியின் கற்றைகள் என சிலிர்த்தெழுந்து தாவணியின்
கோட்டையை தகர்த்தவன்.
காணா இருட்டில் காய்ந்த இலைகளின் சலங்கை பூட்டியலைகிறான்.
ஒழுக்கமற்றவன், பிறன் மனையென தெரிந்தே தழுவுகிறான்.

No comments:

Post a Comment