Thursday 16 January 2014

கூச்சல்கள் காதில் இரைகின்றன, ஒரு கனப்பொழுது நிற்கிறேன் 
யாருமற்ற பிரதேசத்தில் யார்யாரோ இறைகின்றனர் 
திரும்பி பார்க்க துணிவின்றி ஓடுகின்றேன் 
என்காலடி ஓசையின் கூட சில குளம்படிகளும் கேட்கிறது 
எருமையுடனானதா என்று செவிகளை கூராக்கினேன், 
கழுதைகள் போல அவை. பொதி சுமக்கும் கணம் காலடிகளில் கேட்டது.
என் கால்களில் பலம் கூட்டி ஓடினேன், ஏனோ நகர மறுத்தன சுற்றி உள்ள உலகம்.
முதுகில் அரிப்பு கூடி பாலமாக வெடிக்கிறது. மோசமோசவென கூசும் உறசல்களுடன்
ரெக்கை முளைக்கிறது. ஏனோ இதுவும் உதவாது போல.
முனுமுனுப்பாய் குறைகூறும் கிழவி ஒருவள் என்னுள்ளே எங்கோ இருந்து
அவளின் வழக்கமான பாடலை பாடினாள்.
ஓடாத கால்கள், சொல்லாததை கேட்கும் செவி, தொடரும் பொதி சுமக்கும் கழுதை,
முனுமுனுக்கும் கிழவி என பல அரிதான பொக்கிஷங்களோடு தொடர்ந்து ஓடுகிறேன்.
பத்தாத குறைக்கு முகநூல் கவுஜைகள் வேறு.
ச்சே ! நான் என்னைக்கு தான் கவிதை எழுத போறேனோ ?
பொதி சுமக்கும் கழுதையின் காலடி பக்கத்தில் கேட்கிறது , நான் கொஞ்சம் வேகமா ஓடனும்.
அப்பறம் பார்க்கலாம். டாட்டா !!

No comments:

Post a Comment