Thursday 16 January 2014

சோணாட்டு கியாதி



வியாளத்து பதாகை வானேறி வீசும்
பொன்னி பாய்ந்து மருதம் புகும்...
ஏதலர் அஞரும் ககனம் திகழும் ...
பாணர் பாடும் கோணின் புகழும் ...
நெடுநீரோடிய சோணாட்டினத்தே !
களமம் தழைக்கழனியாடும் உழையும் 
தடப்பள்ளி தழுவாத்துள்ளும் கயலும் 
கொங்கையாடும் கொன்றை முடி மாந்தரும்
நிறைப்புண் தாங்கும் நரைமயிர் மூப்பரும்
வன்பகை கொய்த சோணாட்டினத்தே !
எழிலி முடியாடும் குடைந்தேற்றிய கோபுரம்
பழியில் அம்மை கரண்டையாடும் நூபுரம்
ஒகரம் ஆடியுதிர் நீவி நூற்த்த சாமரம்
ஞஞ்ஞையூட்டு நாரினர் அல்கியாடும் பூமரம்
வாஞ்சங்கை எய்தும் சோணாட்டினத்தே ! 

No comments:

Post a Comment