Sunday 28 July 2013

கிணத்து மீன்

தொட்டிக்குள்ள துவண்ட மீனு 
கிணத்து வாசம் தேடுச்சாம்!
கிணத்து குழியில் வாழ்ந்த மீனு 
குளத்த சேர ஏங்குச்சாம்.
குளத்து மீனும் ஏறி வந்து ஏரி சேர, 
ஏரி மீனு பனம்மரத்தில் ஏறி பாத்துச்சாம்!

ரெக்கை கட்டி பறந்து பாக்க 
மீனு துள்ளி எழும்புச்சாம் 
ஒத்த காலில் நின்ன கொக்கு 
வாயில் கவ்வி பறந்துச்சாம்
கொக்கு வாயில் சிக்கி மீனும்
வானில் ஏறி பறக்குதே
வாழ்ந்த குட்டை நல்லதென்று
இப்போ எண்ணி மருகுதே!

No comments:

Post a Comment