Sunday 28 July 2013

தாகம் நீ !

இரவின் ஆழம் தோய்ந்த விழியோ 
மாலையின் மயக்கம் வழியும் பார்வையோ 
சுத்த துறவியும் மயங்கும் நாணமோ
இது இந்திரனும் அடையா சொர்கமோ 

கனவின் துவக்க கருவோ நீ 
காணா நிறத்தின் முளையோ நீ
தெறிக்கும் துளியின் அடரோ நீ 
துடிக்கும் உயிரின் தொடரோ நீ 

வலிக்கும் இழப்பில் வழுக்கா வீரம்
துளிர்க்கும் முனையின் வணங்கா தீரம்
மினுக்கும் விழியின் துடிக்கும் வேகம்
சறுக்கும் வாழ்வின் தவிக்கும் தாகம்!

No comments:

Post a Comment