Sunday 28 July 2013

பசி

ஒரு அரசனுக்கும் அரசியல்வாதிக்கும் நடக்கும் வாதம் 
அரசியல்வாதி நாடமைப்பு கட்டமைப்பு போர் என்று எல்லா துறையிலும் நீண்ட உரையை ஆற்றி முடிக்கிறார் 
அரசன கேட்கிறான்: ஒரு மானை புலி துரத்துகிறது. இதில் எது வெற்றி பெற வாய்ப்பு அதிகம்?
அரசியல்வாதி : மான் தான் ஜெயிக்கும் .
அரசன்: ஏன்?
அரசியல்வாதி : ஏனென்றால் புலி உணவுக்காக ஓடுகிறது மான் உயிருக்காக ஓடுகிறது.
அரசன் சிரிக்கிறான் 
அரசன்: நீர் சொன்ன வாதத்தின் அடிப்படையில் புலி என்ற ஒரு இனம் அழிந்து ஆயிரம் ஆண்டுகளேனும் ஆகி இருக்க வேண்டும்... நடைமுறையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் மானை புலி பிடித்துவிடுகிறது.
அரசியல்வாதி: ஏன்?
அரசன் : ஏனென்றால் மான் பயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது , புலி பசியில். பயத்தை பசி எப்போதும் வென்று விடும். பார்வையில் தான் உள்ளது அரசியல்வாதி வெற்றி. அதனால் தான் நீ அவையில் அமர்ந்துகொண்டு போர்களை ஆய்கிறாய்... நான் போர் களத்தில் போர் புரிந்து கொண்டிருக்கிறேன். 

No comments:

Post a Comment