Sunday 28 July 2013

வல்லினம்


முனை துளிர்க்கும் புல்லின் நுனிப்பரப்பின் மீது
மனைக்கட்டி வாழும் ஒரு மழைத்துளியின் ஈரம்
ஞாலம் பரவும் ஞாயிறின் பெருங்கரங்கள் முடக்கி
தன்னுள் குடியேற்றிடும் சிலகணம் சொல்லிடும்
வல்லினம் தோற்கும் மெல்லினத்தின் வன்மை.

No comments:

Post a Comment