Sunday 28 July 2013

ஈட்டி


அவன் பணக்காரன் இல்ல
அன்னாடம் காய்ச்சி
அவனுக்கு பெருசா ஒன்னும் தெரியாது
உழவ தவிர
போன மகசூலே ஒன்னும் மிஞ்சுல
பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருப்பான்
இல்ல புள்ளைக்கி படிக்க பணம் வேண்டிருக்கும்
இல்ல இன்னும் வேற எதாவது தேவை இருக்கும் .
எதையாவது அடமானம் வச்சி
இல்ல கடனை வாங்கி வெதைய தூவுவான்.
தண்ணியில்ல கரண்ட் இல்ல மழை இல்ல
இன்னும் நெறைய இல்ல ...
உசுர விடுவான் கழனில...
உழைப்பான் .
பயிரும் கொஞ்சம் தலை தூக்கும்.
பசபசன்னு வரும்.
எல்லா கஷ்ட்டமும் முடிஞ்சிதுன்னு கனவு காணுவான்.
புள்ள பொண்டாட்டிய காப்பாத்திடுலாம்னு நம்புவான்.
எங்கிருந்தோ ஒரு மழை
ஒரு புயல்
ஒரு வெள்ளம் வரும்.
எல்லா கனவையும் அழிச்சிடும்.
ஒரு நெல்மநிக்கூட மிஞ்சாது.
சாவு பக்கத்துலேயே நிக்கும் ஒர்த்தன் ரெண்டு பேர்
செத்துகூட போய்டுவான்.
ஆனா எல்லாரும் சாவமாட்டான்.
புயலுக்கூட அவ்ளோ வீரியம் கிடையாது
ஆனா அவன் வீரியம் ஜாஸ்த்தி.
அடுத்த வாட்டி அவன்தான் மொதல்ல வெதைய தூவுவான், நம்பிக்கையோட
இல்லேன்னா நாம எங்க சோறு தின்றது.
அவன்கிட்ட கத்துக்குங்க போராட்டத்தை

No comments:

Post a Comment