Thursday 25 July 2013

நான் ஆண்


ஆணென்று கொண்டதால் 
என் பக்கம் யாவும் அழிந்தே விட்டது 
அழக்கூடாதென்பதில் அழுத்தம் காட்டி 
என் கண்ணீர் என்னுள் கடலாய் ஆர்பரிக்கிறது...
பத்து மாதம் சுமந்துவிட்டவளின் பெருமைகளின் பெருவீச்சில் 
காலமெல்லாம் தன்னையே கரைத்த என் கண்ணியம் கருமிருட்டில் கிடக்கின்றது.
எனக்கென்ன வண்ணம் பிடிக்குமென எனக்கு தெரிந்ததில்லை
என் சகோதிரிகள் மனைவி பிள்ளைகளின் நிறங்கள் நிரம்பி என் ஞாபகம் வழிகின்றது
என் பிள்ளைகளுக்கு வாரத்திற்கு ஒரு சினிமாவிற்காக
மாலையில் என் வடை சிகிரெட் டீ காணாமல் போனது.
முப்பதுகளிலேயே முதுமை அடைந்தேன்
கவட்டையில் நான் அடக்கியிருக்கும் பையில்
பணம் ஏராளம் ....
அதில் எனக்கென்று எதுவும் வைத்ததில்லை.
என் அப்பன் இன்று சிரிகின்றான் என்னை பார்த்து
சகோதரனுக்கு பங்காளியானேன்
மகனுக்கு எதிரியானேன்
மகள் பிரிந்து செல்கையிலும் அழாத தூணானேன்
என் அறிவுரைகள் தொனதொனப்பாகின
அவர் அப்படிதான் என பட்டமும் கிடைத்தது.
என் வீட்டில் எனக்கென்று ஒரு சிறு இடமும் கிடைத்தது
ஓடிய உடல் இன்று ஒவ்வொன்றாய் வலிக்கிறது.
பேரக்குரல்களை போட்டு மெழுகி கொள்கிறேன் என் வலிகளை
அவர் மட்டும் கொஞ்சம் தெருவுசாய் இருந்திருந்தால் ஊரில் பாதியை வளைத்திருக்கலாம் என்ற பாடல் மட்டும் என் தேசிய கீதமானது.
இன்று இது பழகியும் விட்டது 

நான் ஆண்

No comments:

Post a Comment