Sunday 28 July 2013

சுடரினிடை இருள்

இரவின் மிச்சப்பட்ட சிதறல்களாய் காக்கைகள் 
கருப்பு பூசி அலைகின்றன வானமெங்கும்.
எனக்கும் அக்காகங்களுக்கும் இணையான விடயம் ஏராளம்.
தேடலில் துவங்கி திருட்டு தனம் வரை.
மனமெனும் வனத்தில் என் முரண்களும் அலையும் 
காக்கை போல.
உடலெங்கும் இரவை பூசியபடி!

No comments:

Post a Comment