Sunday 24 August 2014

வாழ்வில் உன்னளவு குறை இருந்து கொண்டே இருக்கிறது 
இதயத்தில் உன் இடம் வெறும் வலி நிரம்பி இருக்கிறது 

என்னையும் உன்னையும் தவிர ஒரு சுவரும் இருக்கிறது 
வாழ்க்கை ஏனோ இரண்டாய் பிரிந்து இருக்கிறது.

நானும் நிறுத்தவில்லை நீயும் நிற்கவில்லை 
பாதை தான் உலகெங்கும் விரிந்து கிடக்கிறது 

பனி இரவில் விடியும் வரை கூரை நனைந்து கிடக்கிறது 
கூடவே கொஞ்சம் என் இமைகளும் நனைந்து இருக்கிறது

நான் எழுதும் கவிதை முழுதும் உன் பெயர் இருக்கிறது
என்ன செய்ய .... கவிதை முழுதும் வெறும் இயலாமை இருக்கிறது

No comments:

Post a Comment