Sunday 24 August 2014

பாலையின் நடுவே திடீரென ஒரு வசந்தம் போல் 
கோடையின் நடுவே திடீரென ஒரு பெருமழை போல் 
மழையற்ற ஒரு மாமாங்கதின் கடைசியில் ஒரு வானவில் போல 
ஊமை குயிலின் தொண்டையில் திடீரென உதித்த திடீர் பாடல் போல் 
ஊனமுற்ற மீனுக்கு திடீரென ஒரு விடியலில் நீந்த தெரிந்தது போல் 
புலிக்கு மானிடம் திடீரென தோன்றிய காதல் போல் 
மரவட்டைகள் திடீரென பட்டாம் பூச்சியாவது போல் 
திடீரென நானும் ஒரு நாள் அழகாய் அழிந்து போக வேண்டும்

No comments:

Post a Comment