Saturday 21 June 2014

தெருமுனைல இருந்த வேப்பமரத்து கீழே குந்திருந்தாரு புள்ளையார் சாமி. வேப்பமரம் ரோட்டுக்கு வழிகுடுத்து சாய... புள்ளையார் பிளாட்பார்மல பரதேசிங்க கூட கூட்டாகிட்டாரு. பொட்ட வெயிலில் குந்தி இருக்கும் புள்ளையாருக்கும் எனக்கும் ப்ரான்ஷிப் ஆகிடுச்சி. வி ஷேர் சேம் பீலிங்க்ஸ்.
எனக்கு ஏதாவது வேணும்னு வேண்ட போனேன், அங்க போன அவரே கூரைக்கு வழி இல்லாம குந்தி இருக்கார். சரி நம்மால முடிஞ்சதுன்னு அவரு கூரைக்கு கலெக்ஷன் பண்ற உண்டியலில் காசு போட்டுட்டு வந்துட்டேன்.
நம்ம நேரம் கடவுளுக்கும் நாம தான் படியளக்க வேண்டியிருக்கு.

No comments:

Post a Comment