Saturday 21 June 2014

நீ என்னை கொஞ்சிய வார்த்தைகள்
இந்த காற்றால் கலைக்க இயலாது
எதோ ஒரு குயில் கொத்திக்கொண்டு போய் கூவிக்கொண்டிருக்கிறது.
பசியில் அழும் தாயத்த பிள்ளையின் அழுகையோடு
கலந்து ஒலிக்கிறது என் மௌன கதறல்கள்.
ஒற்றை பனையின் பின் தனியாய் எறியும் நிலவும்
நானும் ஒரே வரிசையில் இருக்கிறோம்.
நிலவு நெருங்க முடியா சூரியனை பார்த்திருக்கிறது
நான் நெருங்க முடிந்தும் காத்திருக்கிறேன்!

No comments:

Post a Comment