Saturday 21 June 2014

பியானோவில் பூனை குதித்தது போல் ஏதோவொன்று எதிரொலிக்கிறது என்னுள்.
கடிகாரத்தின் ஒரு முழு சுற்றை முழுவதுமாக பார்த்துவிட்டேன் இன்று.
தூக்கம், கனவு இல்லை நீ என்று ஏதாவது ஒன்று தேவைபடுகிறது இரவுகளின் நீளத்தை கடக்க.
நீ இல்லாத இரவுகளில் இறைவன் வந்துவிடுகிறான் அவனின் வீணாய் போன படைப்புகளின் தொகுப்பை படித்துக்காட்ட, சட்டென விழித்தெழுகிறேன். வழக்கம் போல உலகாய் மாறி குளிர்ச்சியுடன் சிரிக்கிறான்.

No comments:

Post a Comment