Saturday 21 June 2014

இயேசுவின் இரத்தம் புத்தரின் இதயத்திலிருந்து வழிந்தால் என்ன செய்வேன்
அல்லாவின் கருணையை ஆண்டாள் கொண்டிருந்தால் என்ன செய்வேன்
ஃப்ரியாவின் காமம் ரதியிடம் பொங்கினால் என்ன செய்வேன்
தோரின் வீரம் கந்தனிடம் கணன்றால் என்ன செய்வேன்
ரோசிக்ரூசியனின் சிலுவையில் இயேசு அறையபட்டால் என்ன செய்வேன்
ஃப்ரீ மேசானின் மூன்றாம் கண் சிவனின் நெற்றியிலிருந்தால் என்ன செய்வேன்
பிரமிடுகள் கோவிலின் கோபுரம் போல் தெரிந்தால் என்ன செய்வேன்
ஆபிரகாமும் இப்ராஹிமும் ப்ரஹ்மமும் ஒன்றென்றால் என்ன செய்வேன்
சாராவும் சராயும் சரஸ்வதியும் ஒன்றென்றால் என்ன செய்வேன்
கடவுள் தான் நானென்றால் என்ன செய்வேன்
நான் தான் கடவுளென்றால் என்ன செய்வேன்
நாளை இல்லையென்றால் என்ன செய்வேன்
நானே இல்லையென்றால் என்ன செய்வேன்

No comments:

Post a Comment