Saturday 21 June 2014

எனக்குள் ஒரு சாத்தான்
கடவுளின் முகமூடி இட்டு சுத்துகிறது.
என்னுள் சதை சுவரெங்கும் மோதி
விடுதலை வேண்டி அலறுகிறது.
நியாயங்கள் சொல்லி சாந்த படுத்துகிறேன்.
நான் சொல்லும் வேதங்களை வாய் பிளந்து கேட்கிறது
என்னால் கடவுளென வளர்க்க பட்ட சாத்தான்.
எனக்குள் ஒரு மழை பெய்கிறது.
சாத்தான் நனைந்து பல்லிளித்து சிரிக்கிறது.
யாரோ ஒரு மனிதன் என் தோல் கதவை அறைந்து தட்டுகிறான்
அநியாயம் எனும் கோல் கொண்டு.
விழிக்கும் என்னை தட்டி தூங்க வைத்து என் சாத்தான் கதவை திறக்கிறது,
கடவுளின் முகமூடியணிந்து.
தட்டியவனுக்கு நான் ஓதிய வேதங்களை ஓதுகிறது சாத்தான்.
அவன் வெடி சிரிப்பில் திளைக்கிறான்.
என் சாத்தான் முக மூடி கலைக்கிறது, கூரிய கோரை பற்கள் பளிச்சிட.

No comments:

Post a Comment