Saturday 21 June 2014

பூஜியங்கள் முதன் முதலாய் அறியப்பட்ட காலத்தின் பூஜிய குழப்பங்கள் போல
என் குணம் மேலுள்ளது பிறர் கருத்தும்.
கோபுரங்கள் எழுப்படுவதற்கு முன்னான சிந்தனைகளை கொண்டிருகின்றனர் என்னை சுற்றி அடைக்காக்கும்
பிற மனிதர்கள்.
மண் அகழ்வுகளை முதலில் அறியும் வயதையொத்த மனநிலையில் நான்.
முதல் முதலாக இரு விரல் நுனிகளை தொடும் தந்திரம் அறிந்த தருணம் போல குதூகலிக்கிறேன்.
முதலில் நெய்தலை அறிந்த நெசவாளி போல கர்வத்துடன் திரிகிறேன்.
முதல் குயவனின் மண் கொய்தல் லாவகம் போல என்னை நான் குடைகிறேன்.
முதல் சிக்கி முக்கி கல்லின் உரசல் எப்போது நடக்குமோ ?

No comments:

Post a Comment