Saturday 21 June 2014

இருபுனலோடும் அருஞ்சராசி புகுந்தாடும் நகரதில்
எரியனலெட்டும் நெடும்மாடி அசைந்தாடும் பதாகை
நல்குணமாந்தர் பெருந்தராசில் நன்மணியும் குவிமிக
வன்தோள்வேந்தர் பொருந்த அஞ்சும் பாஞ்சாலம்.


கங்கை யமுனை என இரு ஆறு ஓடும் அறிய செல்வம் (லக்ஷ்மி) புகுந்து எங்கும் செழிக்கும் நகர் அதில்
எரியும் சூரியனையே எட்டும் நெடிந்த கோபுரங்கள் உச்சியில் அசைந்தாடும் முத்திரை கோடி
நல்ல ஒழுக்கம் மிகுந்த மக்கள் தங்களின் பெரிய தராசில் பொன் மணியும் தானியங்களும் குவித்து அளக்க
பெரும் வீரம் கொண்ட எந்த அரசனும் போர் தொடுக்க தயங்கும் பாஞ்சாலம்

No comments:

Post a Comment