Saturday 21 June 2014

சோதியின் மத்தியில் என்ன இருக்கும் குளிர்ச்சியா? வெம்மையா?
புயலின் மத்தியில் என்ன இருக்கும் அதகளமா ? அமைதியா?
மரணத்தின் முடிவில் என்ன இருக்கும் பிரபஞ்சமா? வெறும் கனவா?
பிறப்பின் துவக்கம் எங்கிருக்கும் இறையிடமா ? வெற்றிடமா?
மனதின் நுனி எங்கிருக்கும் பெரும் வெளியிலா? உள்ளே பேராழத்திலா?
அதீத சூட்டின் முடிவென்ன? உறையும் குளிரின் கடையென்ன?
அசையா மலையின் முக திசையென்ன? ஒளியின் பயண தொலைவென்ன?
உயிரின் வடிவம் தான் என்ன? அது உறையும் இடமும் தான் என்ன?
நானும் எதுவின் சாயலோ?
இல்லை இறையின் துகளின் மாயமோ ?!!

No comments:

Post a Comment