Monday 29 July 2013

பத்து நெலா

ஒரு சொட்டு மழை வாங்கி 
சிப்பிக்குள்ள மூடி வச்சி 

மாசம் தேயும் நெலா 
தேயாம தான் தவிச்சி 

கோயில் செல அதுவும் 
தேகம் தான் கொலஞ்சி

மண்டபத்து தூண் வீங்கி 
மலர் ரெண்டும் தான் வீங்கி

புளிச்சதேல்லாம் நான் உண்டு
பத்து நெலா தேயக்கண்டு

தேளா உரு மாறி
தேகம் பிளக்கையிலே

கதறி தான் அழுது
உதிரம் சிதற கண்டு

முத்தாய் நான் வடித்த
முத்தாரமே கண்ணுறங்கு !

No comments:

Post a Comment